SDIG வருண ஜயசுந்தர CID க்கு அழைப்பு
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
‘கெஹெல்பத்தர பத்மே’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவருடன் தொடர்புகளைப் பேணியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

