வத்திக்கான் பயணமானார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணித்துள்ளார்.
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இறுதி ஆராதனையில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவையொட்டி வெற்றிடமாகியுள்ள பாப்பரசர் பதவிக்கான மாநாட்டில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

