தொலைத்தொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்த புதிய சுயாதீன ஒழுங்குமுறை கட்டமைப்பு

தொலைத்தொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்த புதிய சுயாதீன ஒழுங்குமுறை கட்டமைப்பு

கையடக்கத் தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக, இவ்வருட இறுதிக்குள் புதிய சுயாதீன ஒழுங்குமுறை முறைமையொன்றை நிறுவ இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தீர்மானித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகளில் மாற்றங்களைச் செய்து, நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவிக்கையில், 

தற்போது தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் அதன் தரம் குறித்த தரவுகளைப் பெறுவதற்கு, சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் தகவல்களையே ஆணைக்குழு முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

புதிய முறைமையின் ஊடாக, சேவை வழங்குநர்களின் தரவுகளுக்கு அப்பால், ஆணைக்குழு நேரடியாகவும் சுயாதீனமாகவும் சேவையின் தரத்தைக் கண்காணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் நாடு முழுவதும் முறையான தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் (Internet Connectivity) சென்றடைவதை உறுதி செய்தல்,சிக்னல் குறைபாடுகள் மற்றும் இணைய வேகக் குறைபாடுகளைச் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், சேவை வழங்குநர்களின் தரவுகளுக்குப் பதிலாக ஆணைக்குழுவின் நேரடித் தரவுகளின் அடிப்படையில் சேவையின் தரம் மதிப்பீடு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

manel