பிரபா கணேசன் – செந்தில் தொண்டமான் சந்திப்பு!

பிரபா கணேசன் – செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் ஒருமித்த எதிர்கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளருமான பிரபா கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் இன்று சந்திப்பு ஏற்பட்டது.

இச்சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, பிரபா கணேசன் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள ஒருமித்த எதிர்கட்சியின் கூட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சிவில் சமூக அமைப்புகள், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த ஒருமித்த எதிர்கட்சியின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரபா கணேசன், செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தாங்கள் எடுக்கும் முடிவுகளை என்றும் சிந்தித்து நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் பிரபா கணேசனின் கட்சி ஆளும் அரசாங்கம் ஆட்சி புரிவதுதற்கு ஆதரவளித்து, ஆட்சியமைக்க உதவியது வரவேற்கதக்க விடயம் எனவும், தமிழ் மக்கள் சார்ந்த பல வேலைத்திட்டங்களை மாநகர சபை உறுப்பினர்கள் முன்னெடுப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது எனவும் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவித்தார்.

மேலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து அரசாங்கத்தை குறைக்கூறாமல் அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் அரசியல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிரபா கணேசன் ஆரம்பித்துள்ள எதிர்க்கட்சி கூட்டமைப்பு வெற்றியடைய தனது வாழ்த்துக்களையும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.0

manel