கைதான ஐமச உறுப்பினர் கட்சியிலிருந்து இடை நீக்கம்

கைதான ஐமச உறுப்பினர் கட்சியிலிருந்து இடை நீக்கம்

கைதான ஐமச உறுப்பினர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக கட்சி தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது X பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தென் கடற்பகுதியில் நேற்று (20) போதைப் பொருட்களுடன் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். 

இது தொடர்பில் வினவியபோது, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்தனர். 

எஸ். ரஜீவன்